இன்று மாலை எதேச்சையாக சாலையோரம் நடந்த ஒரு இலக்கியக் கூட்டத்தில் கலந்து கொண்டேன். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கமும், தமிழ் செம்மொழி உயராய்வு மையம், மைசூர் உம் சேர்ந்து நடத்திய சங்க இலக்கிய வாரம். தமிழ் நாடு முழுக்க ஒரே நேரத்தில் 100 இடங்களில் இது போன்ற கூட்டத்தை நடத்துகிறார்களாம்.
ஏதாச்சும் வெட்டி மொக்க போடுவானுங்கன்னு நினைச்சு போய் உட்கார்ந்தேன். ஆனால் உருப்படியாகவே பேசினார்கள்.
முந்தா நாள் (19-02-08) அன்று உ.வே.சா பிறந்த நாள். அதை ஒட்டி இந்த
வாரத்தையே சங்க இலக்கிய வாரமாக அறிவித்து இந்த நிகழ்ச்சியை நடத்திக்
கொண்டு இருந்தார்கள்.
சங்க இலக்கியங்களைக் காப்பாற்றிய பெருமை நம் தமிழ் தாத்தாவிற்கு
இருக்கிறது. கட்டை வண்டியிலும், கால்நடையாகவும் போய் பல
இடங்களிலிருந்தும் சேகரித்த ஓலைச்சுவடியைக் கொண்டு சங்க இலக்கியங்களை உயிப்பித்திருக்கிறாராம். அவரின் பெயரில் உள்ள 'உ' உத்தமதானபுரம் என்கிற அவரின் சொந்த ஊரைக் குறிக்கிறதாம். இன்னமும் அவர் ஊருக்கு செல்ல பேருந்து வசதி இல்லையாம். இடிந்து கிடந்த அவரின் வீட்டை நினைவுச் சின்னமாக அறிவித்து ஒரு கட்டடம் கட்டிக் கொண்டிருக்கிறதாம் அரசு.
தமிழ் செம்மொழியாக் அறிவித்ததனால் என்ன பிரயோசனம்?
பிரயோசனம் தான். தமிழ் படித்த 500 பேருக்கு வேலை கிடைத்திருக்கிறது.
இன்னும் 2000 பேருக்கு வேலை காத்துக் கொண்டிருக்கிறது. வெளிப்படையாகப்
பேசிக் கொண்டிருந்தார் பேச்சாளர் தமிழ் செல்வன் என்பவர்.
தமிழைச் செம்மொழியாக அறிவித்த பின் மத்திய அரசு 40 கோடி ரூபாய்
செலவழித்திருக்கிறது. இன்னும் 1000 கோடி ரூபாய் செலவழிக்க இருக்கிறது.
ஆனால் பிழைக்க மட்டுமே தமிழ் படித்த மக்களில் தமிழ் அறிஞர்களே இல்லை அவல நிலை தான் இப்போது இருக்கிறது என்றார்.
உ.வே.சா பற்றிய குறிப்பும், சங்க இலக்கியம் பற்றிய சிறு அறிமுகமும் கொண்ட ஒரு சிறு பதிப்பை ஒரு லட்சம் பிரதிகள் தமிழ் நாடங்கும் விநியோகித்திருக்கிறார்கள் இந்த வாரத்தில்.
பேச்சாளர் உரை முடிந்ததும் கலை நிகழ்ச்சிகள் ஆரம்பித்தன.
'கொண்டை முடி அலங்கரித்து கொஞ்சும் கிளி கையில் வைத்து' பாடலுக்கு ஒரு 6 வயது சிறுமி அட்டகாசமாக ஆடினாள்.
அதற்கடுத்து 'ஆடல் கலையே தேவன் தந்தது' பாடலுக்கு 2 சுமாரான ஃபிகர்கள் மேடைத் தரையையே பார்த்தபடி பரதம் ஆடிக்
கொண்டிருந்தார்கள்.
நான் எஸ்கே.....ப்.
February 21, 2008
உ.வே.சா.வும், சங்க இலக்கிய வாரமும்
வகைப்பாடு:
டைரிப் பக்கம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment