February 03, 2008

இந்திரலோகத்தில் நா.அழகப்பன்

காமெடி படம்னு நினைச்சு பாக்கப் போனா கடுப்படிச்சிட்டானுங்களே. ரேஸ்கல்ஸ்.

படத்தில் பெரிசாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை, இரண்டு எரிச்சல்களைத் தவிர.

1) கணவனுக்கு துரோகம் செய்த பெண்ணை, படி தாண்டியமைக்காக காலில் லாடம் கட்டுகிறார்கள் எமலோகத்தில். அப்பட்டமான ஆணாதிக்கப் பண்பாட்டை வலிந்து திணிக்கிறார்கள். ஒளவையின் காலத்திலிருந்தே இந்த சிந்தனை இருந்து வந்திருக்கிறது.
“ஒருவனைப் பற்றி ஓரகத்து இரு” - கொன்றை வேந்தன். எவ்வளவு மோசமான அடக்குமுறை. ஒளவையே ஒரு ஆணோ என்று கூட சந்தேகம் வருகிறது.

2) ஒரு இடத்தில் அழகப்பன், ஒரு பெண்ணை மானபங்கப்படுத்த வந்த ஒருவனை, ‘நீ, உன் சின்னம்மாவின் மகளோடேயே' என்று தேவலோகத்தில் படித்த அவன் பற்றிய ரகசியத்தைச் சொல்வதான காட்சி. விலக்கப்பட்ட உறவுமுறை (இன்செஸ்ட்) யின் மீதான எதிர்ப்பைக் காட்டி கலாச்சாரக் கொடி நாட்டுகிறார்கள்.

தேவலோக கன்னி ரம்பை பூலோகம் வந்து அழகப்பனின் மேல் காதல் கொள்கிறாள்.
ரம்பையின் வேண்டுகோளை ஏற்று தினமும் இரவில் தேவலோகம் போய் வருகிறான்
அழகப்பன். அங்கே சில குளறுபடிகளைச் செய்த அழகப்பனையும், அவனை அழைத்து
வந்த ரம்பையையும் இந்திரன் சபிக்கிறான். அவர்கள் சாப விமோசனம் அடைந்தது
எப்படி என்பது கதை. கதைச்சுருக்கம் கேட்பதற்கு அழகாகத் தோன்றினாலும்,
நகைச்சுவையாக இந்தப் படத்தை நகர்த்தி இருந்திருந்தால் நன்றாக
இருந்திருக்கும். நடுவில் சொன்ன அந்தக் குளறுபடி மூலமாக, சமுதாய நல்வழிக்
கதையாகப் படத்தை நகர்த்த முனைந்ததில் படம் சறுக்குகிறது.
அந்தக் குளறுபடி என்ன?

தேவலோகத்தில் தான் கண்ட மனிதர்கள் பற்றிய ரகசியங்களை பூலோகத்தில் வந்து
சொல்லி மக்களை நல்வழிப் படுத்தி ஒரு உட்டோபியன்(utopia) உலகத்தைச்
சிருஷ்டிக்கிறார்கள். மக்கள் எல்லாம் திருந்துகிறார்கள். உலகமே அமைதிப்
பூங்காவாகிறது. நரகத்திற்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை ஒரு கட்டத்தில்
பூஜ்ஜியமாகிறது. சமுதாயப் பார்வையை விடுத்து ஒரு மனிதனின் அனுபவமாக
மட்டும் பதிவு செய்யப் பட்டிருந்தால் படம் சிறப்பாக இருந்திருக்குமோ
என்னவோ.

படத்தின் சிறப்பு, கூட்டம் கூட்டமாக அவ்வப்போது வரும் நாபிக் கமலங்கள்.
இதுவரை வந்த தமிழ் படங்களை விட அதிக எண்ணிக்கையில் வருகின்றன.

மொத்ததில் இந்தப் படம் “பகஞ்சரி பட்டு, முகஞ்சரி மொட்டு”
நீங்கள் - அப்படின்னா?
நான் - தயவு செய்து இந்தப் படத்துக்கு போகாதீங்க.

2 comments:

சந்திரசேகர் said...

வடிவேலு படத்தில நவீன சிந்தனைகளையெல்லாம் எதிர் பார்ப்பது ரொம்ப ஓவர் !!!

தென்றல்sankar said...

yeannappa vadivealu avvalavuthaana
yithooda kathanayagan aasaiya vittuttu comedya pakka veandiyathuthaana?
rsankar
singapore