தற்கால தமிழ் படைப்பாளிகள் சிலர் தரும் யோசனைகள்
எஸ்.ராமகிருஷ்ணன்: "வெயில் ஒரு குடுகுடுப்பைக்காரனைப் போல என் வாசலில் நின்றபடி கதறிக் கொண்டிருந்தது. காலிங் பெல் சப்தமிடுவதைப் போல எங்கோ ஒரு காளை மாடு முனகிக் கொண்டிருந்தது. அந்த பகல் பொழுது, குப்புறப் படுத்திருந்த கரடியைப் போல நெளிந்து கொண்டிருந்தது". இந்த மாதிரி 400 பக்க "போல" வசனம் இருக்கு. அத்தனையையும் பிரிண்ட் பண்ணி பின்லேடனின் டாய்லெட் சுவர் முழுக்க ஒட்டுங்க. மறுநாளே சரண்டர் ஆகிறாரா, இல்லையான்னு பாருங்க.
சாரு நிவேதிதா: யாதுரா அந்த பின்லேதன்? அழகா இருப்பாளா? மெயில் ஐடி குடு. நாளைக்கு சாட்ல பிடித்திறேன். எனக்கு சைக்கிள் விதத் தெர்யாது. ஒனக்கு எமினெம் தெர்யுமா? டெசர்ட் ரோஸ் கேட்ருக்கியா? என்னது, இப்பதிக்கு ரோஸ் தான் த்ரியுமா. செப் மாமி. மெட்டாலிக் வாய்ஸ். ஓ.....மோன மோன மோன மோன......ர்ரீ..ர்ரீ.........ர்ர்ர்ர்ர்ர்ரீ.
ஜெயமோகன்: அடப் போங்கப்பா, ஷகீலா படம் பாக்க திருவனந்தபுரம் போறவனை நிப்பாட்டி, இப்படி டார்ச்சர் பண்றீங்களே. வேணும்னா, ஒசாமாவுக்கு ஷகீலா படம் போட்டுக் காட்டுங்க, 'அஹம் பிரம்மாஸ்மி' ன்னு கதறிக்கிட்டு ஓடி வந்து சரண்டர் ஆயிடுவான். "தொப்பி, திலகம்" பதிவுக்கு அப்புறம் "கூலிங் கிளாஸ், குங்குமப் பொட்டு" போட்டிருக்கேன் என் வலைப் பக்கத்தில. அது போக "தேயிலைத் தோட்டமும், மார்க்சிய காமமும்" னு 6000 பக்கத்துல புதுசா ஒரு நாவல் எழுத ஆரம்பிச்சிருக்கேன்.
கோணங்கி: முழு மூடன் காமாஸ்டோவாவைப் பறக்கடித்து சிதறும் அண்டரண்டாப் பட்சியின் சிற்ப நாவடுக்குகளின் ஏழாம் ஏட்டின் குருதி ஒழுகும் ரத்தின ஓலை மடக்குகளில் ஆறாயிர தேவர்களும், கோடானு கோடி அசுரர்களும் ஊதிப் பெருக்கிய குழலொலியின் மொக்குகளின் நினைவடுக்கில் விரியத் துவங்கி இருந்தது காபூல் நகரம். ஹலோ...எங்க ஓடுறீங்க? அட, நில்லுங்கப்பா............
April 19, 2008
ஒசாமாவை பிடிப்பது எப்படி? பாகம்-2
ஒசாமாவை பிடிப்பது எப்படி?
”முத்தமிழ்” கூகுள் குழும உறுப்பினர்கள் சிலர் தரும் ஐடியாக்கள்
சாந்தி: ஹஹ......பின்லேடன் பாளையங்கோட்டைக்காரர் இல்ல. அதனால் நீங்க என்ன பேசினாலும் நான் கண்டுக்க மாட்டேன். குற்றாலம் மெயின் பால்ஸ் என் தங்கச்சி மாதிரி. செண்பகாதேவி அருவி தடாகத்தில தான் நான் நீச்சல் பழகினேன். ஹஹ..........
மஞ்சூரார்: பின்லேடன் மதியானம் 'சாட்'டுக்கு வந்தார். நலமா? ன்னு கேட்டேன். மாயமா மறைஞ்சிட்டார். ஆயிரம் நிலவே வா.....ஓராயிரம் நிலவே வா.....இதழோரம்.................
பட்டாசு: அளவே இல்லாம ஒரு நாளைக்கு 10 தடவ அவர் கிட்ட 'நலமா?' ன்னு கேட்டா, பாவம் அவரும் எவ்வளவு காலம் தான் பொறுப்பாரு. சேப்டி பின் நவீனத்துவ பார்வையில் பின்லேடனின் ஆளுமைக் கூறுகளின் படிமவியல்கள் மீள்பார்வை நோக்கி நிற்கின்றன.
விஜி: ஸ்ரீ ராம ஜெயம். பின்லேடனைத் துரத்த இளைஞனே திரண்டு வா. அடித்து நொறுக்கு, துவம்சம் செய். அறிவுச் சுடராகு.மதி நுட்பம் பெருக்கு. ஆஞ்சநேயன் துணை.
சங்கர்: எ.பி, த,பி இல்லாம செஞ்ச பாறைக் குடைவுகளுக்குள் பின்லேடன் பதுங்கி இருக்கான்னு காஞ்சி காமாட்சி கனவில் சொன்னாள். ஆப்கனின் இலை, பூ, மேகம் எல்லாம் அவனின் ரகசிய காதலிகள். ஆமா, ஒரு முக்கியமான விசயம். நான் சொல்,கருத்து திருத்தம் பண்றேனேன்னு யாரும் கவிதை எழுதுறத நிப்பாட்டிராதீங்க.
கென்: ங்கொக்கா...மக்க.............இங்க யாருக்குமே வாசிப்பனுபவம் இல்ல. நமக்கு அல்ஜீப்ரா தெரிஞ்சு என்ன புண்ணியம்? இன்னும் ப்ளாட்பாரத்தில மனிதக் கூட்டம் படுத்திருக்கு. குறிப்பிட்ட 'அந்த' வார்த்தை இல்லாம யாருமே கவித எழுதக் கூடாது. இதெல்லாம் நடந்தால் பின்லேடன் அகப்படக்கூடும். எல்லாரும் சத்தியத்த கடைப் பிடிக்கனும். பிடிக்காட்டி பிடிக்காதீங்க. 'சாத்தியமற்ற சாத்தியங்களின் மூலை நெருக்கல்கள்' அப்படின்னு ஒரு தொகுப்பு போடப் போறேன் 2030 ல.
April 03, 2008
புனைவுக் கதை
நான் அப்போது பூனையாக இருந்தேன். மதில்களின் மேலேறித் தாவித் திரிந்தேன். மியாவ் மியாவ் என்று சப்தித்தபடி ஊரை வலம் வந்தேன். பால் பாத்திரங்களை உருட்டுவதே என் விருப்பப் பொழுதுபோக்காக இருந்தது.
கொஞ்ச நாட்களில் வீடு மட்டுமே என் உலகமானது. வீட்டுக்குள் வீடு கட்டி விளையாட ஆரம்பித்தேன். உலகம் சுருங்கி என் சன்னலுக்குள் ஒளிந்து கொண்ட அந்த ஒரு நாளில் என் தூக்கத்தில் ஒரு விபரீதம் நடந்து முடிந்திருந்தது. என் வால் துண்டிக்கப்பட்டிருந்தது. குருதி ஒழுகிய வேதனையை விட, 'வாலில்லா பூனை' என்று பலர் பேசிய கேலி அதிகமாய் வருத்த, எங்கிருந்தோ விளைந்த விபரித கற்பனையில் என் பெயரை 'புனை' என்று மாற்ற முடிவு செய்தேன்.
அப்போது அவ்வழியாக வந்த பெரிய சிவந்த கண்களைக் கொண்ட 'வு' என்று அழைக்கப்பட்ட நரியனின் மேல் எனக்கு காதல் பிறந்தது. 'வு' அன்பானவனாகத் தெரிந்தான். அவனுடைய பைக்கில் என்னை அமர்த்தி ஊர் சுற்றிக் காட்டினான். திரையரங்குகளுக்கு அழைத்துச் சென்றான். பாப்கார்ன் வாங்கித் தந்தான்.
ஒரு மாலை நேரத்தில் மழையின் முடிவில் இலைகளிலிருந்து நீர் சொட்டிக் கொண்டிருந்த வேளையில், அவனுடைய மிருதுவான கைகளால் என் முதுகை வருடியபடி இருந்தான். நான் கண்களை மூடிய கிறக்கத்தில் இருந்தேன். "திருமணம் முடிந்ததும் உன் பெயருக்குப் பின்னால் என் பெயரையும் இணைத்து 'புனைவு' என்று எழுதுவாயா?" என்று கேட்டான். கிறக்கம் மறைந்து முதுகு கனக்க ஆரம்பித்தது. வு தான் என் வாலை வெட்டியவனோ என்று முதல் முறையாக சந்தேகம் பிறந்தது. தரையைப் பார்த்தபடி,"ம்.....எழுதுவேன்" என்றேன். என் கன்னத்தில் கை வைத்து என் தலையை உயர்த்தினான். என் மனதில் முணுமுணுத்த வார்த்தைகளை, என் கண்களின் வழியாக அவன் படித்திருந்திருக்கக் கூடும். அப்படி என்ன முணுமுணுத்தேன். "நரியனே, உன்னில் மட்டும் பிணைக்க அல்ல இந்த வாழ்வு, உலகத்தோடு".
என் கண்களைக் காணத் திராணி இல்லாமல் நரியன் வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
அன்றிரவு துண்டிக்கப்பட்ட இடத்தில் என் வால் முளைக்க ஆரம்பித்திருந்தது. மறுநாள் 'மியாவ், மியாவ்' என்று சப்தித்தபடி உலகை வலம் வர ஆரம்பித்தேன்
