ஏனோ வந்துவிடுகிறது
என்னறை வெளிச்சம்
எல்லாவற்றையும்
பார்வைக்கு கொணருவது மாதிரி
எங்கும் வெளிச்சம்
எல்லாம் வெளிச்சம்
இருட்டு மண்டியே கிடக்கிறது
உணர்ச்சிக்காத பார்வைகளில்
பார்வை பொய்
பூதமாய், சிரிப்பாய், சூன்யமாய் இருக்கிறது
என் சன்னல் விளாம்பழ மரம்
எங்கெங்கும் எங்கெங்கும்
ஒரு கனவு
அது பற்றிய சிந்தனை
ஒரு சிந்தனை
அது பற்றிய கனவு
இருட்டுலகத்தில்
January 12, 2008
ஒரு தூக்கக் கலைவில்
வகைப்பாடு:
கவிதை
Subscribe to:
Post Comments (Atom)

2 comments:
kavithai arumai
ennum niraiya elutha en vaalthukkal
kavithaikuyil
rahini
நன்றி ராகினி
Post a Comment