தற்கால தமிழ் படைப்பாளிகள் சிலர் தரும் யோசனைகள்
எஸ்.ராமகிருஷ்ணன்: "வெயில் ஒரு குடுகுடுப்பைக்காரனைப் போல என் வாசலில் நின்றபடி கதறிக் கொண்டிருந்தது. காலிங் பெல் சப்தமிடுவதைப் போல எங்கோ ஒரு காளை மாடு முனகிக் கொண்டிருந்தது. அந்த பகல் பொழுது, குப்புறப் படுத்திருந்த கரடியைப் போல நெளிந்து கொண்டிருந்தது". இந்த மாதிரி 400 பக்க "போல" வசனம் இருக்கு. அத்தனையையும் பிரிண்ட் பண்ணி பின்லேடனின் டாய்லெட் சுவர் முழுக்க ஒட்டுங்க. மறுநாளே சரண்டர் ஆகிறாரா, இல்லையான்னு பாருங்க.
சாரு நிவேதிதா: யாதுரா அந்த பின்லேதன்? அழகா இருப்பாளா? மெயில் ஐடி குடு. நாளைக்கு சாட்ல பிடித்திறேன். எனக்கு சைக்கிள் விதத் தெர்யாது. ஒனக்கு எமினெம் தெர்யுமா? டெசர்ட் ரோஸ் கேட்ருக்கியா? என்னது, இப்பதிக்கு ரோஸ் தான் த்ரியுமா. செப் மாமி. மெட்டாலிக் வாய்ஸ். ஓ.....மோன மோன மோன மோன......ர்ரீ..ர்ரீ.........ர்ர்ர்ர்ர்ர்ரீ.
ஜெயமோகன்: அடப் போங்கப்பா, ஷகீலா படம் பாக்க திருவனந்தபுரம் போறவனை நிப்பாட்டி, இப்படி டார்ச்சர் பண்றீங்களே. வேணும்னா, ஒசாமாவுக்கு ஷகீலா படம் போட்டுக் காட்டுங்க, 'அஹம் பிரம்மாஸ்மி' ன்னு கதறிக்கிட்டு ஓடி வந்து சரண்டர் ஆயிடுவான். "தொப்பி, திலகம்" பதிவுக்கு அப்புறம் "கூலிங் கிளாஸ், குங்குமப் பொட்டு" போட்டிருக்கேன் என் வலைப் பக்கத்தில. அது போக "தேயிலைத் தோட்டமும், மார்க்சிய காமமும்" னு 6000 பக்கத்துல புதுசா ஒரு நாவல் எழுத ஆரம்பிச்சிருக்கேன்.
கோணங்கி: முழு மூடன் காமாஸ்டோவாவைப் பறக்கடித்து சிதறும் அண்டரண்டாப் பட்சியின் சிற்ப நாவடுக்குகளின் ஏழாம் ஏட்டின் குருதி ஒழுகும் ரத்தின ஓலை மடக்குகளில் ஆறாயிர தேவர்களும், கோடானு கோடி அசுரர்களும் ஊதிப் பெருக்கிய குழலொலியின் மொக்குகளின் நினைவடுக்கில் விரியத் துவங்கி இருந்தது காபூல் நகரம். ஹலோ...எங்க ஓடுறீங்க? அட, நில்லுங்கப்பா............
April 19, 2008
ஒசாமாவை பிடிப்பது எப்படி? பாகம்-2
வகைப்பாடு:
நையாண்டி
Subscribe to:
Post Comments (Atom)

2 comments:
குப்புறப் படுத்திருந்த கரடியைப் போல நெளிந்து கொண்டிருந்தது
ஆறாயிர தேவர்களும், கோடானு கோடி அசுரர்களும் ஊதிப் பெருக்கிய குழலொலியின் மொக்குகளின்
nalla karpanai
யாருங்க அந்த நண்பர்?
Post a Comment