March 31, 2008

கவனம்

வெண்மேகமாய் பளிச்சிட்டும்
கீறல்களாய் சிதறி மறையும்
மின்னல் உக்கிரம்

பயத்திலோ, அசுவாரசியத்திலோ
கவனிக்கத் தவிர்த்த கணங்கள்
பூசிய வெறுமைச் சாயத்தின் நெடியில்
மிதந்தபடி இருக்கின்றன
எழுதப்படாத டைரிப் பக்கங்கள்

No comments: