January 12, 2008

ஒரு தூக்கக் கலைவில்

ஏனோ வந்துவிடுகிறது
என்னறை வெளிச்சம்

எல்லாவற்றையும்
பார்வைக்கு கொணருவது மாதிரி

எங்கும் வெளிச்சம்
எல்லாம் வெளிச்சம்

இருட்டு மண்டியே கிடக்கிறது
உணர்ச்சிக்காத பார்வைகளில்

பார்வை பொய்

பூதமாய், சிரிப்பாய், சூன்யமாய் இருக்கிறது
என் சன்னல் விளாம்பழ மரம்

எங்கெங்கும் எங்கெங்கும்
ஒரு கனவு
அது பற்றிய சிந்தனை
ஒரு சிந்தனை
அது பற்றிய கனவு
இருட்டுலகத்தில்

2 comments:

rahini said...

kavithai arumai
ennum niraiya elutha en vaalthukkal
kavithaikuyil
rahini

சிவக்குமார் said...

நன்றி ராகினி