”முத்தமிழ்” கூகுள் குழும உறுப்பினர்கள் சிலர் தரும் ஐடியாக்கள்
சாந்தி: ஹஹ......பின்லேடன் பாளையங்கோட்டைக்காரர் இல்ல. அதனால் நீங்க என்ன பேசினாலும் நான் கண்டுக்க மாட்டேன். குற்றாலம் மெயின் பால்ஸ் என் தங்கச்சி மாதிரி. செண்பகாதேவி அருவி தடாகத்தில தான் நான் நீச்சல் பழகினேன். ஹஹ..........
மஞ்சூரார்: பின்லேடன் மதியானம் 'சாட்'டுக்கு வந்தார். நலமா? ன்னு கேட்டேன். மாயமா மறைஞ்சிட்டார். ஆயிரம் நிலவே வா.....ஓராயிரம் நிலவே வா.....இதழோரம்.................
பட்டாசு: அளவே இல்லாம ஒரு நாளைக்கு 10 தடவ அவர் கிட்ட 'நலமா?' ன்னு கேட்டா, பாவம் அவரும் எவ்வளவு காலம் தான் பொறுப்பாரு. சேப்டி பின் நவீனத்துவ பார்வையில் பின்லேடனின் ஆளுமைக் கூறுகளின் படிமவியல்கள் மீள்பார்வை நோக்கி நிற்கின்றன.
விஜி: ஸ்ரீ ராம ஜெயம். பின்லேடனைத் துரத்த இளைஞனே திரண்டு வா. அடித்து நொறுக்கு, துவம்சம் செய். அறிவுச் சுடராகு.மதி நுட்பம் பெருக்கு. ஆஞ்சநேயன் துணை.
சங்கர்: எ.பி, த,பி இல்லாம செஞ்ச பாறைக் குடைவுகளுக்குள் பின்லேடன் பதுங்கி இருக்கான்னு காஞ்சி காமாட்சி கனவில் சொன்னாள். ஆப்கனின் இலை, பூ, மேகம் எல்லாம் அவனின் ரகசிய காதலிகள். ஆமா, ஒரு முக்கியமான விசயம். நான் சொல்,கருத்து திருத்தம் பண்றேனேன்னு யாரும் கவிதை எழுதுறத நிப்பாட்டிராதீங்க.
கென்: ங்கொக்கா...மக்க.............இங்க யாருக்குமே வாசிப்பனுபவம் இல்ல. நமக்கு அல்ஜீப்ரா தெரிஞ்சு என்ன புண்ணியம்? இன்னும் ப்ளாட்பாரத்தில மனிதக் கூட்டம் படுத்திருக்கு. குறிப்பிட்ட 'அந்த' வார்த்தை இல்லாம யாருமே கவித எழுதக் கூடாது. இதெல்லாம் நடந்தால் பின்லேடன் அகப்படக்கூடும். எல்லாரும் சத்தியத்த கடைப் பிடிக்கனும். பிடிக்காட்டி பிடிக்காதீங்க. 'சாத்தியமற்ற சாத்தியங்களின் மூலை நெருக்கல்கள்' அப்படின்னு ஒரு தொகுப்பு போடப் போறேன் 2030 ல.
April 19, 2008
ஒசாமாவை பிடிப்பது எப்படி?
வகைப்பாடு:
நையாண்டி
Subscribe to:
Post Comments (Atom)

1 comment:
ha ha ha :D
Post a Comment